அம்பேத்கர் சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, டிச. 6 அண்ணல் அம்பேத்கர் 67ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.