திருச்சி புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்த ஒடிசா முதலமைச்சர் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன்
திருச்சி புத்தகத் திருவிழாவிற்கு ஒடிசா முதலமைச்சர் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், வருகை தந்து, புத்தக அரங்கினைப் பார்வையிட்டு,திருச்சி மாவட்டத்தினைச் சார்ந்த சான்றோர்கள் நெல்லை ஆ.சுப்பிரமணியன், வி.நா.சோமசுந்தரம், கலைமாமணி மு.இளங்கோவன். ஆங்கரை பாரதி ஆகியோரைப் பாராட்டி விருதினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, “இந்தியா எனும் மழைக்காடு” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், லால்குடி வருவாய் கோட்ட ஆட்சியர் ச.வைத்தியநாதன், மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.