முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.25 தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு பரிமாறி கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திட்ட இயக்குநர் (மகளிர்) ரமேஷ்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் கமலம் கருப்பையா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.