முதலமைச்சர் திருச்சி வருகை : ட்ரோன்கள் பறக்க தடை

0 488
Stalin trichy visit

திருச்சி, மே 6  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி  மே 8, 9 இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்திருப்பதாவது,   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி மே 8, 9 அன்று நள்ளிரவு 12 மணி வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.