ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பானகம் வழங்கல்
திருச்சி, மே 6 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனைப்படி கோயிலுக்கு வரும் பக்தர்களை வெயில் தாக்கத்தில் இருந்து காக்கும் பொருட்டு மூலிகை நீர்மோர் கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களுக்கு கூடுதல்லாக பானகம் வழங்க நேற்று அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தி இருந்தார். அதனை தொடந்து இன்று முதல் ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் உபயதாரர்கள் செலவில் பக்தர்களுக்கு பானகம் கோயில் இணை ஆணையர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அர்ச்சகர் சுந்தர் பட்டர், உள்துறை கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்.