பணிநிறைவு பெற்ற சீனியர் டெக்னீஷியனுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவிப்பு
பொன்மலை ரயில்வே டீசல் பணிமனையில் (Senior Technician) சீனியர் டெக்னீஷியன் ஆக பணி நிறைவு பெறுவரை கெளவரப்படுத்தும் விதமாக தபால் தலை வெளியிட்டு விழா நடந்தது.
டீசல் பிரிவுவில் 35 ஆண்டுகள் பணி புரிந்து 30.04.23 பணி நிறைவு பெறும் சீனியர் டெக்னீஷியன் ஜீ.சுந்தர் அவருக்கு டீசல் pumps & blowers பிரிவில் சார்பாக பாராட்டு விழா மேற்பார்வையாளர் சேதுராமன் தலைமையில் மேற்பார்வையாளர் செந்தில்நாதன், ஒய்வு பெற்ற சீனியர் டெக் னீஷியன் பால்ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

விழாவில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகி கே.சி. நீலமேகம் அவருடன் பணிபுரிந்த சீனியர் டெக்னீஷியன் ஜீ.சுந்தர் அவருக்கு கௌரப்படுத்தும் விதமாக அவர் படம் பெற்ற சிறப்பு தபால் தலை அச்சிட்டு வெளியிட்டார்.
பிறகு அனைவரும் அவருக்கு நினைவு பரிசாக ரயில் இஞ்சின் வடிவம் , வாட்சு , பொன்னாட்டை , மற்றும் நினைவு பரிசு கொடுத்து பாராட்டி , வாழ்த்தி அனுப்பினார்கள்.
விழாவில் கே.காளியப்பன், சுரேஷ், உதயகுமார், பெரியசாமி, செல்வராஜ், , உலகநாதன் , கோவிந்தன், உபதுல்லா கான் ,மார்ட்டின், ராஜா, பத்மநாதன், பணி ஒய்வு பெறும், ராஜேந்திரன், ஜான் , மற்றும், டீசல் தொழிலாளர்கள் , யூனியன் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள் .