திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.அதன்படி செங்குளம் காலனி, துரைசாமிபுரம், ஆலம் தெரு, சையத் நகர், அடைக்கலமாதா கோவில், அலங்கநாதபுரம், தாராநல்லூர், காமராஜ் நகர், பெரியார் நகர், வள்ளுவர் தெரு, கீழபடையாச்சி, முத்துமணி டவுன், அந்தோணியார் கோவில், புதுத்தெரு, காமராஜபுரம். கோரிமேடு பெரியமிளகுபாறை, பர்மா காலனி, ஜான்சி நகர், வசந்த நகர், உள்ளிட்ட 91 இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதேபோல் புறநகர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூர், வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை , தொட்டியம் ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 82 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.