திருச்சி மாவட்டம், புத்தானத்தத்தை அடுத்த திருநெல்லிப்பட்டி அருகே உள்ள குப்பனார்பட்டியை சேர்ந்தவர் ரேணுகா(வயது 13). இவர் கடந்த 15ம் தேதி வீட்டில் விறகு அடுப்பை பற்ற வைத்த போது, எதிர்பாராத விதமாக அவரின் உடலில் தீப்பற்றி படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.