உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்
திருச்சி, ஜுன் 23 திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், அதிகாரம் ஊராட்சியில் கிராம சேவை மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களை சந்தித்து குழுவாக தொழில் செய்வது தொடர்பாக எடுத்துரைத்தார். உடன் மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி திட்ட அலுவலர்கள் இளங்கோவன், நிர்மலாதேவி ஆகியோர் உள்ளனர்.