மருங்காபுரி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜுன் 23 திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், நாட்டர்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.51 லட்சம் மதிப்பீட்டில் சீகம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணியினையும்,

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்மை மரம் ஏறும் கருவியின் செயல்பாட்டினையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.