அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருச்சி, ஜூன் 4 கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து திருச்சி மாநகராட்சி கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் வழங்கினார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளனர்.