அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்
திருச்சி, ஆக.20 திருச்சி அண்ணா விளையாட்டரங்களில் மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகளில் இன்று தொடங்கியது.
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 8, 10, 12, 14, 16, 18, 20 வயது பிரிவினருக்கான மாவட்ட தடகளப் போட்டிகள் இன்று காலை மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜீ தலைமையில், தடகள சங்கப் பொருளாளர் ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் ஆகியோர் தொடங்கியது.
தடகளப் போட்டிகளை M.ஆனந்தன், Commandant of Police, TSP 1 BN, & துணைதலைவர், TDAA, ஸ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை, ஸ்ரீஸ்ரீ வேலு தேவர் அய்யா ஆகியோர் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தார்கள்.
நாளை மாலை 5.30 மணிஅளவில் பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.