தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு
தஞ்சை, மார்ச் 25 தஞ்சை தொகுதி பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சையில் இன்று பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து தி.மு.க. தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ச.முரசொலியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.