தி.மு.க. மீது கலங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

0 747
Stalin trichy visit

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இல்லம் தேடி கல்வி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

அதற்குள் இடர்பாடுகள் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சொன்னதுதான் முதலமைச்சர் அழகாக வடிவமைத்து கொடுத்த திட்டம் தான் இல்லம் தேடி கல்வி. மரக்காணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசும்போது கூட இது திராவிட திட்டம் என்று பேசியிருக்கிறார். திராவிட திட்டம் என்று சொல்லும் பொழுதே நாங்கள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதல்வர் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார்.

அந்த வகையிலே நாங்கள் கவனத்துடன் செயல்படுத்துவோம். தி.மு.க. கட்சியின் மீது கலங்கம் ஏற்படுத்தும் கட்சி நிர்வாகி மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
மூன்றாம் அலையைப் பொருத்த வரைக்கும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் அதற்கு பதில் சொல்லவேண்டும். ஏற்கனவே டெல்லி சென்று வந்துள்ளார்.

அவர் எப்படி வலியுறுத்துகிராரோ, ஊரடங்கு உத்தரவில் எந்த ஒரு தளர்வாக இருந்தாலும் சுகாதாரத் துறை அமைச்சரின் கருத்து கேட்டு தான் செய்து வருகிறோம். அந்த வகையில் அவர் என்ன வலியுறுத்துகிறார்களோ அதன்படி நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.