125 ஆண்டுகளாக செயல்படும் விடுதலைப் போராட்ட வீரர் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி
125 ஆண்டுகளுக்கு (16/06 / 1897) முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
ஸ்ரீரங்கத்தில் சித்திரை வீதியில், வெள்ளைக் கோபுரம் முன்பாக தேர் நிற்கும் இடத்திற்கு அருகில் டாக்டர் இராஜன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் இடத்தில் அவர் பெயரால் ஒரு அரசு நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டு இன்று 125 ம் ஆண்டில் காலடி வைத்து கடந்து செல்கிறது. டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஸ்ரீரங்கம் .

இன்று 10 மணிக்கு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி கொண்டாட்டத்தை தொடங்குகிறோம்.
இன்றும் 600 மாணவர்களுடன் ஆறு மெய்நிகர் வகுப்பறைகளுடன்
அனைத்து வகுப்பறைகளும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அரசுப் பள்ளியாக வெற்றி நடை போடுகிறது