காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்

0 199
Stalin trichy visit

திருச்சி, செப்.24  காவிரி ஆற்றில் மண்ணுக்குள் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாம்பழச்சாலை அருகே காவிரி மண்ணுக்குள் புதைந்து , தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி – அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிபடி மாணவர்களுக்கான கல்விக்கடனை ரத்துசெய்யாததை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்ககோரியும் விவசாய சங்கதலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.