குடும்ப பிரச்சினையால் பெண் தற்கொலை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சின்னராசு மனைவி பாப்பாத்தி (45). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 ம் தேதி விஷத்தன்மை கொண்ட ஒரு வகை இலையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.