குழந்தைகளுக்கு நிதி ஆதரவு உதவிதொகை : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருச்சி, செப்.30 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையின் சார்பில் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் 31 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு உதவித் தொகையினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.