காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
திருச்சி, ஜூலை 22 துளசி பார்மசி சார்பில் காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கான இலவச மருத்துவமுகாம் இன்று காலை 10 மணியளவில் சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் பார்வையிட்டார். பின்னர் அவரும் கண்பரிசோதனை செய்து கொண்டார்.