திருச்சி ABVP மாணவர் அமைப்பினர் சார்பாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!
திருச்சி ABVP மாணவர் அமைப்பினர் சார்பாக மகாத்மா காந்தி அவர்களின் 152-வது பிறந்த தினம் மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர இணை செயலாளர் ஸ்ரீ. சந்தோஷ் குமார் மற்றும் மாநகர இணை செயலாளர் டயானா மற்றும் மாநகர இணை செயலாளர் ஸ்ரீ. விஜய் மற்றும் தென் தமிழக மாநில சமூக வலைதள இணை பொறுப்பாளர் ஸ்ரீ. பிரவிண் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி. ஹேமா சூரியா மற்றும் மாநகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.