உயர்மின் விளக்கு கோபுரம்: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
திருச்சி, ஆக.24 திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 16 ல் விஷ்வாஷ் நகர் இரண்டாவது வீதிதியில் மாநகராட்சி பொது நிதி ரூபாய் 7 இலட்சம் மதிப்பிட்டில் உயர் மின் விளக்கு கோபுரத்தை வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலம் மூன்றின் தலைவரும்மான மு.மதிவாணன் தலைமையில்திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் , அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்
நிகழ்வில் உதவி ஆணையர் ரமேஷ் குமார் பொறியாளர் ஜெகஜீவராமன் இளநிலை பொறியாளர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்