லால்குடி அரசுப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி ஊராட்சி ஒன்றியம், தாளக்குடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 42.70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் ,துணைத் தலைவர் சந்தோஷ் ,லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் சங்கர், பொதுப்பணித்துறை பொறியாளர் கிலாண்டி ரோஸ் ராஜலிங்கம் மாணிக்கம் கோபால் மெர்வின் பிரகாஷ் பிரேமா லட்சுமி திராவிடர் கழக தலைவர் ஆல்பர்ட் ,கழக நிர்வாகிகள் , ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.