துவாக்குடி அரசு அச்சகத்தில் செய்தித்துறை அமைச்சர் ஆய்வு
திருச்சி, ஜூன் 20 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், துவாக்குடியில் இயங்கி வரும் அரசு அச்சகத்தினை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், அரசு அச்சக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.