துறையூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிதாக கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை கட்டத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.