திருச்சி வளர்ச்சி குழுமம், மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம்
மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
பாய்ண்ட் அகாடமி அரங்கில் நடைபெற்றது.
மகளிர் மேம்பாட்டு குழு துணைச் செயலாளர் நமீதா
வரவேற்றார்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம்
ஸ்ரீரங்கம் ஒருங்கிணைப்பாளர்
வெண்ணிலா முழுமதி
தலைமை வகித்தார்.
துணைச்செயலாளர்
சாந்தி பன்னீர்செல்வம்
மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் தேவி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து
பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன.மூத்த சமூக ஆர்வலர்
சகுந்தலா சீனிவாசன் கவிதை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழுமம் தலைவர் வழக்கறிஞர் திருச்சிNS. திலீப்,
செயலாளர் யோகா விஜயகுமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.