திருச்சி அருகே கிராவல் மண் எடுத்த ஜேசிபி மற்றும் வாகனங்கள் பறிமுதல்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கே.பெரியபட்டி ஊராட்சி ஆற்றுப்படுகையில் மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி தனிப்படை போலீசார் அங்கு சென்று சத்திரப்பட்டிக்குளம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்த டிப்பர் லாரி ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

வாகன ஓட்டுனர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் மணப்பாறை போலீசார் வாகன உரிமையாளர் சீத்தப்பட்டி ராமச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.