குழந்தைகளோடு ஆசிரியை மாயம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி பள்ளிக்கு சென்ற குழத்தைகளை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர்
வீடு திரும்பவில்லை. குழந்தைகளுடன் மாயமானார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராணி லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த லால்குடி போலீசார் மாயமான ஆசிரியரை மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.