மதுப்பிரியர்களின் கூடாராமாக மாறிய மணப்பாறை பேருந்து நிலையம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்து நிலையத்தில் நடப்பாதையில் மது குடிக்கும் கூடாரமாகவும். பயன்படுகிறது. இதில் வரக்கூடிய பெண்கள், கல்லூரி மாணவிகள், முதியோர், அவர்களிடம் தரக்குறைவாக பேசுவதும், அதேபோல் போதையில் அரை நிர்வாணத்துடன் கடப்பதாலும் இந்த வழியாக வரக்கூடிய பெண்கள் முகத்தை சுளிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது இது இல்லாமல் நடு பாதையில் படுத்து உருண்டு கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக இந்த பகுதியில் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையத்தில் உள்ளது காவலர்களை நியமிக்க வேண்டும் அவர்கள் அடிக்கடி பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டால் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும் உரிய காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.