வழக்குரைஞர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்
திருச்சி, டிச.17 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில்
துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர முகாம் நடைபெற்றது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் மற்றும் தங்கள் BMI க்கு ஏற்பார் போல் தங்கள் எடை உள்ளதா என்பதை எடை மெஷின் மூலம் கணக்கிட்டுக் கொள்ளலாம்
மேலும் தற்போது ஏற்பட்டு வரும் ஜலதோஷம் காரணமாக நுரையீரல் பரிசோதனையும் நடைபெற்றது காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.