தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முதலமைச்சருடன் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் டாக்டர் டி.காட்வின் தேவநாயம் ராஜ்குமார் தனது குடும்பத்தாருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் உள்ளனர்.