வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் “பொன்விழா” ஆண்டை கொண்டாடும் விதமாக இன்று திருச்சி சோமரசம்பேட்டையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் S.வளர்மதி, கே.கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட பொருளாளர் சேவியர், ஒன்றிய செயலாளர்கள் எல்.ஜெயக்குமார், கோபு, நடராஜன் மற்றும் ஸ்ரீரங்கம், ரவிச்சந்திரன், ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.