அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர்லைன் மருத்துவமனை: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 128
Stalin trichy visit

திருச்சி அருகே அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர்லைன் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

சில்வர்லைன் மருத்துவமனை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மற்றும் நெ.1 டோல்கேட் இடையே பழூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர்லைன் மருத்துவமனை பிரமாண்ட கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடந்தது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

சில்வர்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.செந்தில்குமார், இயக்குனர் டாக்டர் ஜி.ஹேமலதா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.