தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டு, தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர்
இந்நிகழ்ச்சியில் சேலம் மேயர் இராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், துணைமேயர் சாரதா தேவி, பள்ளிக்கல்வித்துறை அலுவர்கள், மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.