வாளாடி பகுதியில் 14ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்
வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை 14 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்.
வாளாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் கீழ்கண்ட பகுதிகளான நகர், கீழப் பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாத்துரை, கீழ்மாரிமங்கலம், திருமங்கலம், மாந்துறை, நெய் குப்பை, ஆர். வளவனூர், பல்லபுரம் புதூர் உத்தமனூர்,
வேளாண் கல்லூரி ஆங்கரை சரவணா நகர், தேவி நகர், கைலாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.