முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற எம்.பி.க்கள்
திருச்சி, ஜூன் 7 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கே.என்.அருண்நேரு, திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. துரைவைகோ ஆகியோர் வாழ்த்து பெற்றனர். உடன் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்பட பலர் உள்ளனர்.