கடை முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் மதுராபுரி நகரில் பழைய இரும்பு கடை முன் நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.போலீசில் புகார்.
நம்பர் 1 டோல்கேட் மதுராபுரி நகர் சந்திரா பிளாட்டைச் சேர்ந்தவர் ராமராஜ் பாண்டியன். இவரது மனைவி 60 என்ன பாப்பா. இவருடைய கணவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் வேலை செய்யும் நபர் அவரது பஜாஜ் பல்சர் பைக் கடை முன் நிறுத்தியுள்ளார். பின்னர் மறுநாள் பார்த்தபோது பைக் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பாப்பா கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.