சமையல் உதவியாளர்களுக்கான பதவி உயர்வுக்கான ஆணையினை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
திருவரம்பூர் ஊராட்சி ஒன்றியம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமையல் உதவியாளர் நிலையில் இருந்து சமயலராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி ஆணைகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 25 பள்ளிகளில் சமையல் உதவியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு சமையலறாக பதவி உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருவரம்பூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம் மற்றும் வட்டாரஅலுவலர் வட்டாரவளர்ச்சி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்,