வைரமுடி சேவையில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் இராப்பத்து உற்சவத்தின் 5ம் நாளான இன்று (6.1.2023) ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் வைரமுடி அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.