ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு
திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த நல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்டவட்டாட்சியர், ஒன்றியக் குழு உறுப்பினர் மகேஷ், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆதிசிவன், இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆசிரியப் பயிற்றுனர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.