பட்டா, நலத்திட்ட உதவிகள் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்

0 254
Stalin trichy visit

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது,

இவ்விழாவில் நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வீட்டு மனை பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு
ஸ்கூட்டி,தையல் இயந்திரம், சலவைப் பெட்டி,உட்பட 60,22,510ரூபாய் மதிப்புடைய பல் வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும்
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் வழங்கினார்கள்

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர்.ரமேஷ் குமார்,டி.ஆர்.ஓ.பழனிகுமார்,குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்இளம்பரிதி,மாநகர 3வது மண்டல குழு தலைவர்-பகுதி செயலாளர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.