“கதிர் அடிக்கும் களம்” பெரம்பலூர் எம்.பி. அருண் நேரு திறந்து வைத்தார்
திருச்சி, செப். 22 முசிறி அருகே கதிர் அடிக்கும் களத்தை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஜம்புமடை ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கிராமத்தில் கதிர் அடிக்கும் களத்தை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திட்ட அலுவலர் கங்காதாரணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.