பெரும்பிடுகு முத்தரையர் 1347வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுச்சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சிராப்பள்ளியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
திரு.கே. என். நேரு , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் . அன்பில் மகேஸ் பொய்யாமொழி , மாண்புமிகு சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இன்று (23.5.22) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு. சிவராசு,, சட்டமன்ற உறுப்பினர்கள்ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார் எஸ். இனிகோ இருதயராஜ் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.