திருச்சி துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டாரில் ஒரு பகுதி, ஏ.இ.ஆர். பி.எச் செக்டர், ஏ.ஓ.எல், நேரு நகர், அண்ணா வளைவு, அக்பர் சாலை, எம்.டி. சாலை, அரசு பாலிடெக்னிக், தேசிய தொழில் நுட்பக் கழகம் (என்.ஐ.டி), ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திராநகர், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, பர்மாநகர், தேவராயநேரி, தேனீர்ப்பட்டி, அசூர், பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதே போல் எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அவசரகால பணிகள் நடைபெறுகிறது. அதன்படி டி.எஸ்.பி. முகாம், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதமின் நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் மின் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.