தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 8 பேர் படுகாயம்
திருச்சி, ஜூலை 25 சென்னையில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மரவனூர் என்ற இடத்தில் செல்லும்போது மேம்பாலம் வேலை நடைபெற்று வருவதை கவனிக்காமல் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.