மேகதாதுவில் அணைகட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியதை கண்டித்தும், உறுதுணையாக உள்ள ஒன்றிய
அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ராயல்ராஜா தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டு கர்நாடகத்திற்கு எதிராகவும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.