மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்தில் மத்திய அரசின் தமிழ்நாடு மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும் 100 நாள் வேலைத்திட்டத்தில் தரவேண்டிய 4000 கோடியை விடுவிக்காததை கண்டித்தும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ் ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.