திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஆக.11 திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயர் அன்பழகன் னிடம் மனு அளித்தார்கள்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் துர்காதேவி ,ஜெய நிர்மலா, நகர் நல அலுவலர், செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.