நடைபாதையில் வழிந்தோடும் கழிவு நீர் : மணப்பாறை நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் கழிவறை செப்டிக் டேங்க் நிரம்பி மக்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் நடைபாதையில் வழிந்து ஓடுவதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் மற்றும் கார் ஸ்டாண்ட் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீர் செய்ய நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.