மூதாட்டியை திட்டிய ரவுடி கைது
திருச்சி, மார்ச்.28 திருச்சி, மதுரை சாலை, குப்பங்குளம், கண்ணன் ஸ்டோரைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது55), இவரது வீட்டின் அருகே சரித்திரப்பதிவேடு ரவுடியான அருள்மணி (வயது25) குடியிருந்து வருகிறார். மார்ச்26ம் தேதி இவர் லட்சுமி வீட்டின் அருகே சிறுநீர் கழித்துள்ளார். இதை கேட்ட லட்சுமியை தகாத வார்த்தைககளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து அருள்மணியை கைது செய்தனர்.