காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன
ஸ்வச்சதா பக்வாடா என்ற தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, பொன்மலை ரயில்வே பணிமனை பகுதியில் ஸ்வச்சதா பக்வாடா விழாவின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் பொன்மலை ரயில்வே அனைத்து அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் , சாரணர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர்.